search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    களக்காட்டில் ஆக்கிரமிப்பு சொத்துக்களை மீட்க கோரி இந்து அமைப்பினர் நூதன போராட்டம்
    X

    களக்காட்டில் ஆக்கிரமிப்பு சொத்துக்களை மீட்க கோரி இந்து அமைப்பினர் நூதன போராட்டம்

    ஆக்கிரமிப்பு சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி களக்காட்டில் இந்து அமைப்பினர் கோவில் உண்டியலில் மனுக்களை போட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    களக்காடு:

    களக்காடு சத்திய வாகீஸ் வரர், கோமதி அம்மன் கோவிலுக்கு ஏராளமான சொத்துகள் உள்ளன. அவைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக புகார் கூறப்படுகிறது. ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து சொத்துக்களை மீட்க வேண்டும் என்று இந்து அமைப்பினர் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு மனுக்கள் அனுப்பியும் நடவடிக்கை இல்லை.

    எனவே கோவில் சொத்துக்களை மீட்க கோரி இந்து சமய மன்ற செயலாளர் கணேசன் தலைமையில் பா.ஜ. நிர்வாகி தினகரன் முன்னிலையில் கோவில் உண்டியலில் மனுக்களை போட்டு இறைவனிடம் முறையீடு செய்து நூதன போராட்டம் நடத்தினர்.
    Next Story
    ×