search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாளையில் கணவருடன் தகராறில் பெண் தற்கொலை
    X

    பாளையில் கணவருடன் தகராறில் பெண் தற்கொலை

    பாளையில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்த பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நெல்லை:

    பாளை சமாதானபுரத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது40). இவர் முருகன் குறிச்சியில் உள்ள ஒரு கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி (31). முருகேசன் அடிக்கடி மதுகுடித்து விட்டு வருவதால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    அதுபோல நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்த ராஜேஸ்வரி, அரளி விதையை அரைத்து குடித்து விட்டார். இதில் மயங்கிய ராஜேஸ்வரியை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று அதிகாலை அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    Next Story
    ×