search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் கட்டும் பணி விரைவில் தொடங்கும்- தூத்துக்குடி கலெக்டர் தகவல்
    X

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் கட்டும் பணி விரைவில் தொடங்கும்- தூத்துக்குடி கலெக்டர் தகவல்

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு ரூ.1.34 கோடியில் மணிமண்டபம் கட்ட அரசாணை வந்துள்ளதால் அதற்கான பணி விரைவில் தொடங்கும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். #SivanthiAditanar
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் இன்று கூறியதாவது:-

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மற்றும் இசை மேதை நல்லப்ப சுவாமிகள் ஆகிய இருவருக்கும் இன்று பிறந்த நாள். டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களுக்கு ரூ.1.34 கோடியில் மணிமண்டபம் கட்ட அரசாணை வந்துள்ளது. மணிமண்டபம் கட்டும் பணி விரைவில் தொடங்கும்.

    அதே போல் நல்லப்ப சுவாமிக்கு விளாத்திகுளத்தில் ரூ.20 லட்சத்தில் நினைவு தூண் கட்ட அரசாணை வந்துள்ளது. நல்லப்ப சுவாமி பிறந்த நாள் அமைச்சர் தலைமையில் அரசு விழாவாக இன்று மாலை கொண்டாடப்படுகிறது.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்த பசுமை தீர்ப்பாயம் நியமித்த நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான ஆய்வுக் குழுவினர் பொதுமக்களிடம் நேற்று கருத்து கேட்டனர். ஆய்வுக்குழுவிடம் மொத்தம் 2 ஆயிரத்து 500 மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.


    ஸ்டெர்லைட் ஆலையில் தாமிர தாதுவை அகற்ற அந்த நிர்வாகத்திற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. அதை வாங்கக்கூடிய நபர்கள் வந்ததும் தாமிர தாது அகற்றும் பணி தொடங்கும்.

    தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்து வைக்கப்பட்டுள்ள 55 ஆயிரம் டன் மலேசிய மணல் இருப்பு உள்ளது. அதில் கோர்ட்டு உத்தரவுப்படி முதல் கட்டமாக 11 ஆயிரம் டன் விற்பனை செய்யப்படுகிறது. விற்பனை நாளை தொடங்குகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #SivanthiAditanar #thoothukudicollector #sandeepnanduri
    Next Story
    ×