search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தனியார் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
    X

    தனியார் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

    ஸ்ரீபெரும்புதூர் தனியார் மோட்டார்சைக்கிள் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வல்லம் பகுதியில் தனியார் மோட்டார் சைக்கிள் தயாரிக்கும் கம்பெனி உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊழியர்கள் சிலர் தொழிற்சங்கம் ஆரம்பித்ததாக தெரிகிறது. இதையடுத்து 2 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த தொழிலாளர்கள் கடந்த 21-ந் தேதி முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று 4-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. இதில் 250-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். #tamilnews
    Next Story
    ×