என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அங்கன்வாடி பெண் ஊழியர் கொலை - கள்ளக்காதலன் வெறிச்செயல்
Byமாலை மலர்24 Sep 2018 6:33 AM GMT (Updated: 24 Sep 2018 10:37 AM GMT)
திருப்பத்தூர் அருகே அங்கன்வாடி பெண் ஊழியரை அவரது கள்ளக்காதலன் கல்லால் தாக்கி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அருகே உள்ள குரிசிலாபட்டு ரெட்டிவலசை கிராமத்தை சேர்ந்தவர் பசுபதி. இவரது மனைவி சுதா (வயது 32). அங்கன்வாடி சத்துணவு அமைப்பாளராக உள்ளார். 7 வயதில் 1 மகள் உள்ளார்.
கடந்த 4 ஆண்டுக்கு முன்பு பசுபதி இறந்துவிட்டார். இதனையடுத்து சுதா அவரது மகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் இன்று அங்குள்ள பாம்பாறு ஆற்றில் உள்ள ஒரு பள்ளத்தில் சுதா தலை நசுங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.
அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளனர். இதனால் அவரது உடல் முழுவதும் ரத்தம் காணப்பட்டது. இதனை கண்டு திடுக்கிட்ட பொதுமக்கள் குரிசிலாபட்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். திருப்பத்தூர் டி.எஸ்.பி. ஜேசுராஜ், இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சுதாவின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சுதாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த டெய்லர் சதீஷ் (32) என்பவருக்கும் கள்ளதொடர்பு இருந்தது தெரியவந்தது.
போலீசார் சதீசை பிடித்து கிடுக்கிபிடி விசாரணை நடத்தினர். இதில் சுதாவை சதீஷ் கொலை செய்தது தெரியவந்தது.
கணவனை இழந்து தனிமையில் இருந்த சுதாவுக்கும் சதீசுக்கும் கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு கள்ளகாதலாக மாறியது. சதீஷ் சுதாவின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார்.
நேற்று முன்தினம் இரவு சுதாவின் வீட்டுக்கு சதீஷ் வந்தார். அப்போது அந்த வீட்டில் இருந்து ஆண் ஒருவர் வேகமாக வெளியேறி சென்றார்.
அவர் யார் என்பது குறித்து சதீஷ் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
சுதாவின் நடத்தையில் சதீசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தார். நேற்று இரவு சுதாவை அவரது மோட்டார் சைக்கிளில் பாம்பாற்றுக்கு அழைத்து சென்றார்.
அங்கு வைத்து இருவரும் மது அருந்திவிட்டு உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் சுதாவின் தலையில் கல்லை போட்டு சதீஷ் கொலை செய்துள்ளார்.
அவரது உடலை ஆற்றில் உள்ள பள்ளத்தில் தூக்கிபோட்டு விட்டு சேலையால் உடலை மூடிய சதீஷ் அங்கிருந்து புறப்பட்டார். மோட்டார் சைக்கிளை அருகில் உள்ள கிணற்றுக்குள் தள்ளிவிட்டுவிட்டு சதீஷ் வீட்டுக்கு சென்று எதுவும் தெரியாதது போல் நடந்து கொண்டார்.
இந்த தகவல்களை சேகரித்த போலீசார் சதீசிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் அருகே உள்ள குரிசிலாபட்டு ரெட்டிவலசை கிராமத்தை சேர்ந்தவர் பசுபதி. இவரது மனைவி சுதா (வயது 32). அங்கன்வாடி சத்துணவு அமைப்பாளராக உள்ளார். 7 வயதில் 1 மகள் உள்ளார்.
கடந்த 4 ஆண்டுக்கு முன்பு பசுபதி இறந்துவிட்டார். இதனையடுத்து சுதா அவரது மகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் இன்று அங்குள்ள பாம்பாறு ஆற்றில் உள்ள ஒரு பள்ளத்தில் சுதா தலை நசுங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.
அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளனர். இதனால் அவரது உடல் முழுவதும் ரத்தம் காணப்பட்டது. இதனை கண்டு திடுக்கிட்ட பொதுமக்கள் குரிசிலாபட்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். திருப்பத்தூர் டி.எஸ்.பி. ஜேசுராஜ், இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சுதாவின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சுதாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த டெய்லர் சதீஷ் (32) என்பவருக்கும் கள்ளதொடர்பு இருந்தது தெரியவந்தது.
போலீசார் சதீசை பிடித்து கிடுக்கிபிடி விசாரணை நடத்தினர். இதில் சுதாவை சதீஷ் கொலை செய்தது தெரியவந்தது.
கணவனை இழந்து தனிமையில் இருந்த சுதாவுக்கும் சதீசுக்கும் கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு கள்ளகாதலாக மாறியது. சதீஷ் சுதாவின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார்.
நேற்று முன்தினம் இரவு சுதாவின் வீட்டுக்கு சதீஷ் வந்தார். அப்போது அந்த வீட்டில் இருந்து ஆண் ஒருவர் வேகமாக வெளியேறி சென்றார்.
அவர் யார் என்பது குறித்து சதீஷ் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
சுதாவின் நடத்தையில் சதீசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தார். நேற்று இரவு சுதாவை அவரது மோட்டார் சைக்கிளில் பாம்பாற்றுக்கு அழைத்து சென்றார்.
அங்கு வைத்து இருவரும் மது அருந்திவிட்டு உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் சுதாவின் தலையில் கல்லை போட்டு சதீஷ் கொலை செய்துள்ளார்.
அவரது உடலை ஆற்றில் உள்ள பள்ளத்தில் தூக்கிபோட்டு விட்டு சேலையால் உடலை மூடிய சதீஷ் அங்கிருந்து புறப்பட்டார். மோட்டார் சைக்கிளை அருகில் உள்ள கிணற்றுக்குள் தள்ளிவிட்டுவிட்டு சதீஷ் வீட்டுக்கு சென்று எதுவும் தெரியாதது போல் நடந்து கொண்டார்.
இந்த தகவல்களை சேகரித்த போலீசார் சதீசிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X