search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நடிகர் கருணாஸ் சர்ச்சை பேச்சு: யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்- ஓ.பன்னீர்செல்வம்
    X

    நடிகர் கருணாஸ் சர்ச்சை பேச்சு: யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்- ஓ.பன்னீர்செல்வம்

    நடிகர் கருணாஸ் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். #Opanneerselvam #karunas
    உத்தமபாளையம்:

    தேனி அருகே உத்தமபாளையம் அடுத்த சுருளி அருவியில் சாரல் விழா நடந்தது. இதில் கலந்து கொள்ள வந்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் நிருபர்கள் நடிகர் கருணாஸ் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து அவர் கூறுகையில், எந்த ஒரு தனி நபரும் எந்த ஒரு சமுதாயத்தைப் பற்றியும் இழிவாக பேசக்கூடாது. அது யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். டி.டி.வி. தினகரன் தனிப்பட்ட முறையில் தாக்கி பேசுவதில் இருந்தே அவரது குணாதிசயங்களை தெரிந்து கொள்ளலாம் என்றார்.

    பின்னர் நடைபெற்ற விழாவில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

    அந்த சமயத்தில் சீர்மரபினர் மக்களுக்கு அரசியல் அமைப்பு சட்டத்தில் அங்கீகாரம் வழங்க வேண்டும். நல வாரிய திட்டங்களை செயல்படுத்தக் கோரி அந்த அமைப்பின் மாநில பொறுப்பாளர் தவமணி அம்மாள் தலைமையில் துணை முதல்வரிடம் மனு கொடுக்க வந்தனர். ஆனால் போலீசார் 3 பேருக்கு மட்டுமே மனு வழங்க அனுமதி கொடுத்தனர். இதனால் சீர் மரபினர் ஆத்திரமடைந்தனர்.

    விழா முடிந்ததும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களின் கார்கள் புறப்பட்டது. உடனே சீர்மரபினர் ஓ.பி.எஸ். காரை முற்றுகையிட்டனர். அதோடு நடுரோட்டில் அமர்ந்து மறியல் செய்தனர்.

    ஓ.பி.எஸ். காரை முற்றுகையிட்டு அவருக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பிய சீர்மரபினர்

    எங்கள் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று கோ‌ஷம் போட்டனர். உஷாரான போலீசார் சீர்மரபினரை சமரசப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. #Opanneerselvam #karunas
    Next Story
    ×