என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ராமநாதபுரத்தில் மணல் கடத்தும் கும்பலிடம் இன்ஸ்பெக்டர் பேரம் - வாட்ஸ் அப் ஆடியோவால் பரபரப்பு
கீழக்கரை:
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி தாலுகாவுக்குட்பட்ட தத்தங்குடி கண்மாயில் குடிமராமத்து என்ற பெயரில் பல இடங்களில் மிக ஆழமாக தோண்டி பொக்லைன் எந்திரம் மூலம் மணல் கொள்ளையடிக்கப்பட்டதாக பரமக்குடி சப்- கலெக்டர் விஷ்ணுசந்திரனுக்கு பொதுமக்களிடம் இருந்து புகார் வந்தது.
இதையடுத்து பொதுப் பணித்துறை உதவி பொறியாளர் கண்ணன், சிக்கல் வருவாய் ஆய்வாளர் தியாகராஜன், கிராம நிர்வாக அலுவலர் கருணாகரன் ஆகியோர் மீது குற்ற விசாரணை முறை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க விளக்கம் கேட்டு சப்-கலெக்டர் நோட்டீசு அனுப்பினார்.
தொடர்ந்து கனிம வளத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து மணல் கொள்ளையை உறுதி செய்து அறிக்கை சமர்ப்பித்தனர்.
சப்-கலெக்டர் மேற் கொண்ட ஆய்விலும் பல இடங்களில் விதிமுறைகளை மீறி மணல் அள்ளப்பட்டது தெரியவந்தது.
இந்த நிலையில் சிக்கல் இன்ஸ்பெக்டர் முகமது நசீர், தத்தங்குடி கண்மாயில் மணல் அள்ளும் கடத்தல் கும்பலுடன் பேரம் பேசும் உரையாடல் வாட்ஸ் அப்பில் வைரலாக பரவியது.
அந்த உரையாடலில் அந்தப்பகுதியைச் சேர்ந்த காளிதாஸ் மணல் கடத்தல் புரோக்கராக செயல்பட்டதும் அவரிடம் இன்ஸ்பெக்டர் முகமது நசீர் ரூ.20 ஆயிரம் கேட்டு பேரம் பேசுவது போன்ற தகவல்களும் வெளியாகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனாவிடம் கேட்டபோது, மணல் கொள்ளை கும்பலுடன், சிக்கல் இன்ஸ்பெக்டர் முகம்மது நசீர் பேரம் பேசியது குறித்து விசாரணை நடத்துமாறு கீழக்கரை டி.எஸ்.பி. (பொறுப்பு) நடராஜனுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த ஆடியோவின் உண்மைத்தன்மை தெரிந்த பின்னர் இது தொடர்பாக துறை ரீதியான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். #Sandrobbery
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்