search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நடத்தையில் சந்தேகத்தால் தகராறு: கணவரை கத்தியால் குத்திய மனைவி
    X

    நடத்தையில் சந்தேகத்தால் தகராறு: கணவரை கத்தியால் குத்திய மனைவி

    குடும்ப தகராறில் கணவரை கத்தியால் குத்திய மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை கே.புதூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மகிபாலன் (வயது 41). திருமணமான இவர் 2004-ம் ஆண்டு மனைவியை விவாகரத்து செய்து விட்டார்.

    அதன்பிறகு கடந்த 2011-ம் ஆண்டு சரளாதேவி என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

    சரளாதேவி அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதனால் அவரது நடத்தையில் சந்தேகம் அடைந்த மகிபாலன் செல்போனை எடுத்து பார்த்துள்ளார்.

    இது தொடர்பாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த சரளாதேவி கத்தியால் மகிபாலனை குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

    இது குறித்து கே.புதூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×