search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவில் உண்டியலை உடைத்து திருடிய வாலிபர் கைது
    X

    கோவில் உண்டியலை உடைத்து திருடிய வாலிபர் கைது

    கறம்பக்குடி அருகே கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே பொன்னன்விடுதியில் பிரசித்தி பெற்ற காப்புமுனிக்கோவில் உள்ளது. இந்த கோவில் முன்பு உள்ள உண்டியலில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் என பலரும் காணிக்கை செலுத்தி செல்வது வழக்கம். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலையில் கோவில் பூசாரி பூஜை செய்வதற்காக கோவிலுக்கு சென்றார். அப்போது கோவில் முன்பு இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு கிடந் ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக மழையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதை யடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையில் மழையூரில் சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அந்த வாலிபர் பட்டுக்கோட்டை அருகே உள்ள நடுவிக்கோட்டை கிராமத்தை சேர்ந்த முருகேசன் (வயது 38) என்பதும், அவர் காப்புமுனிக் கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றதும் தெரியவந்தது. எவ்வளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டது என்ற விவரத்தை போலீசார் கூற மறுத்து விட்டனர். இதையடுத்து முருகேசனை மழையூர் போலீசார் கைது செய்து, ஆலங்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    இதையடுத்து நீதிபதி கலைநிலா, முருகேசனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவரை போலீசார் அழைத்து சென்று புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். 
    Next Story
    ×