search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மல்லாபுரம் அருகே அம்மன் கோவிலில் 4 பவுன் நகை - 3 ஆயிரம் பணம் திருட்டு
    X

    மல்லாபுரம் அருகே அம்மன் கோவிலில் 4 பவுன் நகை - 3 ஆயிரம் பணம் திருட்டு

    அம்மன் கோவிலில் 4 பவுன் நகை மற்றும் 3 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்துள்ள மல்லாபுரத்தை சேர்ந்தவர் தருமன் வயது (52). இவர் வட்டகானம்பட்டி கூட்டு ரோடு அருகே அமைந்துள்ள அம்மன் கோவிலில் தர்மகர்தாவாக இருந்து வருகிறார்.

    இவர் கடந்த 21-ந் தேதி கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் நேற்று காலை கோவிலை திறந்து பார்த்தபோது அம்மன் கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க காசு மற்றும் ரூ.3,000 பணமும் திருடு போயிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து மாரண்ட அள்ளி போலீசாரிடம் தருமன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×