search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரபேல் போர் விமான ஊழலில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை - இ.கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
    X

    ரபேல் போர் விமான ஊழலில் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை - இ.கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

    பிரதமரின் நேரடி தலையீட்டுல் செய்யப்பட்ட ரபேல் போர் விமான ஒப்பந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை என இ.கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா வலியுறுத்தியுள்ளார். #Rafaledeal #DRaja
    சென்னை:

    சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இ.கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா கூறியதாவது:-

    ரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி நேரடியாகவே தலையிட்டு இருந்தார். இதில் ரிலையன்ஸ் நிறுவனத்தை நுழைத்த அதே வேளையில் இந்திய அரசுக்கு சொந்தமான ஹெச்.ஏ.எல். நிறுவனம் நிராகரிக்கப்பட்டது ஏன்? என்பது தான் இவ்விவகாரத்தில் எழும் அடிப்படை கேள்வியாக உள்ளது.

    இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதிலை அறிய மக்கள் விரும்புகிறார்கள். நிதி மந்திரி அருண் ஜெட்லி, ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு பதிலாக இதில் நேரடி தொடர்புள்ள மோடிதான் விளக்கம் அளிக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    ஆனால், இந்த அரசு எதையோ மறைக்கிறது என்பதைதான் பிரதமர் சாதித்து வரும் மவுனம் உறுதிப்படுத்துகிறது. எனவே, ரபேல் ஊழலில் மறைந்திருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்க பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Rafaledeal #DRaja
    Next Story
    ×