என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் ரூ.22 லட்சம் தங்கம் கடத்தல் - 2 பேர் சிக்கினர்
Byமாலை மலர்23 Sep 2018 11:32 AM GMT (Updated: 23 Sep 2018 11:32 AM GMT)
மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் ரூ.22 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. #goldsmuggling
ஆலந்தூர்:
மலேசியாவில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு விமானம் ஒன்று வந்தது. அதில் இருந்து இறங்கிய பயணிகளை சுங்கதுறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சென்னையைச் சேர்ந்த இப்ராகிம் என்பவர் கொண்டு வந்த டேபிள் மின் விசிறியை சோதனை செய்தனர். அதில் 350 கிராம் எடையுள்ள தங்க கட்டி மற்றும் தங்க செயினை மறைத்து வைத்து வந்தது தெரிந்தது.
அதே விமானத்தில் வந்த மற்றொரு பயணியான சென்னையைச் சேர்ந்த முகமது 400 கிராம் எடையுள்ள 2 தங்க கட்டிகளை குடியுரிமை பகுதியில் உள்ள கழிவறை தண்ணீர் தொட்டியில் மறைத்து வைத்து விட்டு, சுங்க சோதனை முடிந்து வெளியே செல்லும் போது மீண்டும் தங்கக் கட்டிகளை எடுக்க முயன்றார்.
அப்போது அவரை சுங்கத் துறை அதிகாரிகள் பிடித்தனர். 2 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.22 லட்சம் ஆகும். #goldsmuggling
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X