search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருணாஸ் பேச்சு ஏற்புடையதல்ல - பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
    X

    கருணாஸ் பேச்சு ஏற்புடையதல்ல - பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

    கருணாஸ் பேச்சு ஒருதுளி கூட ஏற்புடையதல்ல என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். #Karunas #PonRadhakrishnan

    விருதுநகர்:

    பா.ஜனதா கட்சியின் விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ராஜபாளையத்தில் இன்று நடைபெற்றது. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் எம்.பி. மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நடிகர் கருணாஸ் பேச்சு ஒரு துளி கூட ஏற்புடையதல்ல. அவரது பேச்சு அவரை சார்ந்தவர்களின் உணர்வை தூண்டி விட்டு கலவரத்தை ஏற்படுத்துமானால் சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டவர்கள் மீது சட்டம் தன் கடமையை செய்யும்.

    சாதி, இனம், மதம், மொழி ஆகிய உணர்வுகளை தூண்டி விடும் வகையில், பேசும் நிலைமாற வேண்டும். குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க கனிமொழி எம்.பி. கோரிக்கை விடுத்ததை வரவேற்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×