என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வரம்பு மீறி யார் பேசினாலும் தவறுதான்: கருணாஸ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - தமிழிசை
ஸ்ரீவில்லிபுத்தூர்:
பா.ஜனதா தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவில் சிலை திருட்டு அதிகமாக நடைபெறுவதால் போலியான சிலையை வழிபடுகிறோமோ என பக்தர்களிடம் கேள்வி எழுந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கோவிலை விட்டு வெளியேற வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு.
முதல்வர் முதல் கடைநிலை ஊழியர் வரை யார் வரம்பு மீறி பேசினாலும் அது தவறுதான். கருணாஸ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எச்.ராஜா, தனது மீதான புகாரை நீதிமன்றத்தில் சட்டப்படி எதிர்கொள்வார்.
விநாயகர் சிலையை வைத்து அரசியல் செய்கிறார்கள். தி.மு.க.விற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். இன்று தொடங்கும் பிரதமரின் மக்களுக்கான காப்பீடு திட்டத்தில் தமிழக அரசும் இணைந்ததற்கு நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.
ராஜபாளையத்தில் நேற்று இரவு நடைபெற்ற மத்திய அரசின் சாதனை விளக்க கூட்டத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-
தமிழகத்தில் ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லாமல் நாம் செயல்படுகிறோம். தமிழகத்தில் கூட்டணியும் கிடையாது. யாருடைய துணையும் கிடையாது. மாநில, மாவட்ட நிர்வாகிகள் முழுமையாக சுற்றுபயணம் செய்யவில்லையென்றால் தமிழகத்தில் பா.ஜனதாவை எப்படி வளர்க்க முடியும்?
வருங்காலத்தில் பா.ஜனதா இல்லாமல் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலமையை உருவாக்க வேண்டும். தமிழகத்தில் தேர்தல் பணிகளை ஆரம்பிக்க வேண்டும். வாக்குச்சாவடி தோறும் இளைஞர்களை நியமிக்க வேண்டும்.
நமக்கு கொடுத்த பொறுப்பை உணர்ந்து பணியாற்றினால் பா.ஜனதா பலம் பெறும். இப்போதே நம்மை நோக்கி தமிழக அரசு நகர்ந்து வருகிறது. மோடி ஆட்சியை அகற்றுவோம் என தி.மு.க. கூறி வருகிறது.
இந்தியாவில் 21 மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சி செய்கிறது. மோடி கொண்டு வந்த திட்டங்களை மக்களிடம் எடுத்து சென்றால் போதும். தமிழகத்தில் மிகப் பலம் வாய்ந்த கட்சியாக பா.ஜனதாவை மாற்றுவோம். சட்டமன்ற பொறுப்பாளர்கள் முழுமையாக பணியாற்ற வேண்டும்.
இதுவரை 35 சதவீதம் தான் பணியாற்றி உள்ளோம். மாவட்ட நிர்வாகிகள் அங்கீகாரத்தை பெற வேண்டும். திராவிட கட்சிக்கு எதிராக பணியாற்ற வேண்டும். தி.மு.க., அ.தி.மு.க.வை அசைக்கக் கூட முடியவில்லை. பிறகு எப்படி மோடியை அசைக்க முடியும்?
எனக்கு செல்போனில் பல வகையில் மிரட்டல் வருகிறது. பா.ஜனதாவை தமிழகத்தில் அரியணையில் ஏற்றாமல் என் உயிர் போகாது. தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்.
இவ்வாறு அவர் பேசினார். #Karunas #TamilisaiSoundararajan
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்