search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சர்ச்சை பேச்சு: எச்.ராஜா மீது சட்டப்படி நடவடிக்கை - எடப்பாடி பழனிசாமி
    X

    சர்ச்சை பேச்சு: எச்.ராஜா மீது சட்டப்படி நடவடிக்கை - எடப்பாடி பழனிசாமி

    எச்.ராஜா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #CMEdappadiPalaniswami #HRaja

    மதுரை:

    மதுரை விமான நிலை யத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறிய தாவது:-

    பொது வாழ்வுக்கு வந்து விட்டால் எப்படி நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை சிலர் கடைபிடிப்பதில்லை. எனவே பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா மீதான விவகாரத்தில் சட்டம் தனது கடமையை செய்யும்.

    திருப்பரங்குன்றம், திருவாரூரில் நடைபெற உள்ள இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.


    மக்கள் தங்களை மறந்துவிடக் கூடாது என்பதற்காக தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து தமிழக அரசு மீது குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். உண்மையில் ஊழல் குற்றச்சாட்டுகள் அவர்கள் மீதுதான் உள்ளது.

    ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு என்றால் அது தி.மு.க. தான். பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசுதான் குறைக்க வேண்டும். நாங்களும் மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #CMEdappadiPalaniswami #HRaja

    Next Story
    ×