என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வீடுகளின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை - பணம் திருட்டு
Byமாலை மலர்22 Sep 2018 5:10 PM GMT (Updated: 22 Sep 2018 5:10 PM GMT)
முத்துப்பேட்டை அருகே வீடுகளின் பூட்டை உடைத்து நகை- பணம், டி.வி. ஆகியவற்றை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள கீழநம்மங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன் (வயது45). இவர் நேற்று காலை குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பினார். அப்போது அறிவழகன் வீட்டின் கதவு பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த
டி.வி. திருட்டு போய் இருந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக மற்ற பொருட்கள் திருட்டு போகவில்லை. இதுகுறித்து அறிவழகன் முத்துப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். இதன்பேரில் போலீசார் டி.வி.யை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
முத்துப்பேட்டை அருகே உள்ள பாண்டி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்(46). இவருடைய தந்தை தெட்சிணாமூர்த்தி கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அப்பகுதி சாலையில் கடந்து சென்றபோது விபத்தில் சிக்கி பலியானார். இந்தநிலையில் விசேஷங்கள் முடிந்து நேற்று காலை சுரேஷ் மற்றும் குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தனர். நேற்று மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 3 பவுன் சங்கிலி மற்றும் பணம், பொருட்கள் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து சுரேஷ் எடையூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் நகை- பணத்தை திருடி சென்ற மர்ம மனிதர்களை தேடி வருகிறார்கள்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள கீழநம்மங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன் (வயது45). இவர் நேற்று காலை குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பினார். அப்போது அறிவழகன் வீட்டின் கதவு பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த
டி.வி. திருட்டு போய் இருந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக மற்ற பொருட்கள் திருட்டு போகவில்லை. இதுகுறித்து அறிவழகன் முத்துப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். இதன்பேரில் போலீசார் டி.வி.யை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
முத்துப்பேட்டை அருகே உள்ள பாண்டி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்(46). இவருடைய தந்தை தெட்சிணாமூர்த்தி கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அப்பகுதி சாலையில் கடந்து சென்றபோது விபத்தில் சிக்கி பலியானார். இந்தநிலையில் விசேஷங்கள் முடிந்து நேற்று காலை சுரேஷ் மற்றும் குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தனர். நேற்று மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 3 பவுன் சங்கிலி மற்றும் பணம், பொருட்கள் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து சுரேஷ் எடையூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் நகை- பணத்தை திருடி சென்ற மர்ம மனிதர்களை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X