search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏர்வால்வில் பழுது ஏற்பட்டு வீணாகும் குடிநீர்
    X

    ஏர்வால்வில் பழுது ஏற்பட்டு வீணாகும் குடிநீர்

    ஏர்வால்வில் பழுது ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறதே என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
    நொய்யல்:

    கரூர் மாவட்டம் புகளூர், வேலாயுதம்பாளையம், தவுட்டுப்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதி பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அதில் இருந்து குழாய்கள் மூலம் மேற்கண்ட பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் தவுட்டுப்பாளையம் -பாலத்துறை சாலையில் உள்ள ஒரு ஓட்டல் அருகே செல்லும் குடிநீர் குழாயில் அமைக்கப்பட்டுள்ள ஏர்வால்வில் பழுது ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. கரூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் சாலை மறியல் நடத்தி வரும் நிலையில் இதுபோன்று குடிநீர் வீணாகி வருகிறதே என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஏர்வால்வில் ஏற்பட்ட பழுதினை சரி செய்து குடிநீர் வீணாகுவதை தடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×