search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நான் தலைமறைவாக இல்லை - பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா
    X

    நான் தலைமறைவாக இல்லை - பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா

    காரைக்கால் அருகே உள்ள திருக்கடையூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, தாம் தலைமறைவாக இல்லை என தெரிவித்துள்ளார். #BJP #HRaja
    காரைக்கால்:

    இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்திக்கு தமிழகத்தில் சில கட்டுப்பாடுகள் அரசு விதித்து இருந்தது. அந்த கட்டுப்பாடுகளின் அடிப்படையில் போலீசார் விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி அளித்து வந்தனர்.

    அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்துகொள்ள வந்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, உயர்நீதிமன்றத்தையும், தமிழக காவல்துறையையும் அவதூறாக பேசினார். இதுதொடர்பாக அவர்மீது நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், எச்.ராஜாவை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது.

    இந்நிலையில், இன்று காரைக்கால் அருகே உள்ள திருக்கடையூரில் பேட்டியளித்த எச்.ராஜா, தாம் தலைமறைவாக இல்லை என்றும், தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், தன்னை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்ட விஷயமே தமக்கு தெரியாது எனவும் எச்.ராஜா தெரிவித்துள்ளார். முன்னதாக ஹெச்.ராஜாவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற சிலரை போலிசார் கைது செய்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  #BJP #HRaja
    Next Story
    ×