search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

    சாத்தூரில் உள்ள அமிர்தா பவுண்டேசன் மதுபோதை மறுவாழ்வு மைய அலுவலகத்தில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    விருதுநகர்:

    சாத்தூரில் உள்ள அமிர்தா பவுண்டேசன் மதுபோதை மறுவாழ்வு மைய அலுவலகத்தில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அமிர்தா பவுண்டேசன் நிறுவனர் உமையலிங்கம் தலைமை வகித்தார். டாக்டர் கார்த்திக் செல்வம் முன்னிலை வகித்தார்.

    வக்கீல் ஸ்டாலின் கருத்துரை வழங்கினார். மனநல டாக்டர் குமரேசன் மதுபோதை பாதிப்புகள் மற்றும் மறுவாழ்வு குறித்து ஆலோசனை வழங்கினார். தேசிய இளையோர் விருதாளர் விஜயராகவன் உடல் நலம் சார்ந்த ஆலோசனைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மது போதையால் உடல் நலம் மற்றும் மன நலம் பாதிக்கப்பட்டு அமிர்தா பவுண்டேசன் சார்பில் அளிக்கப்பட்ட சிகிச்சை மற்றும் ஆலோசனையில் நிவாரணம் பெற்றவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. மேலும் பெண்கள், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு மனநலம் சார்ந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இறுதியில் தனியார் கிளினிக் இயக்குனர் பெருமாள்சாமி நன்றி கூறினார். 
    Next Story
    ×