search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிருஷ்ணகிரி அருகே பைக் மீது டிராக்டர் மோதியதில் கூலி தொழிலாளி பலி
    X

    கிருஷ்ணகிரி அருகே பைக் மீது டிராக்டர் மோதியதில் கூலி தொழிலாளி பலி

    பைக் மீது டிராக்டர் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி காந்தி ரோடு பகுதியை சேர்ந்த செல்வராஜ்(55). கூலி தொழிலாளி. தனது பைக்கில் கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை சாலையில் கிட்டம்பட்டி அருகே நேற்று சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த டிராக்டர் இவர் மீது மோதியதில் செல்வராஜீக்கு தலையில் பலத்த காயம் ஏற்பப்டது. 

    உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர கிசிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை இறந்துவிட்டார். 

    இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
    Next Story
    ×