என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சேதுபாவாசத்திரம் அருகே சாராயம்-மது விற்ற 2 பேர் கைது
பேராவூரணி:
பேராவூரணி அருகே உள்ள சின்ன ஆவுடையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 38). இவர் மகாராஜ சமுத்திரம் ஆற்றங்கரையில் அனுமதியின்றி சாராயம் விற்றதாக சேதுபாவாசத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சென்று பார்த்த போது சங்கர் சாராயம் விற்று கொண்டிருந்தார்.
உடனே அவரை கைது செய்தனர். மேலும் சாராயத்தை சோதனை செய்த போது அதில் ரசாயனம் கலப்படம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதனால் சாராய பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
இது போல் சோலைகாடு அடுத்த கூத்தாடி வயல் பகுதியில் மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்திய போது, பாலசுப்பிரமணியன் (49) என்பவர் அனுமதியின்றி மது விற்பனை செய்வது தெரியவந்தது.போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்