search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேதுபாவாசத்திரம் அருகே சாராயம்-மது விற்ற 2 பேர் கைது
    X

    சேதுபாவாசத்திரம் அருகே சாராயம்-மது விற்ற 2 பேர் கைது

    சேதுபாவாசத்திரம் அருகே சாராயம் மற்றும் மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பேராவூரணி:

    பேராவூரணி அருகே உள்ள சின்ன ஆவுடையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 38). இவர் மகாராஜ சமுத்திரம் ஆற்றங்கரையில் அனுமதியின்றி சாராயம் விற்றதாக சேதுபாவாசத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சென்று பார்த்த போது சங்கர் சாராயம் விற்று கொண்டிருந்தார்.

    உடனே அவரை கைது செய்தனர். மேலும் சாராயத்தை சோதனை செய்த போது அதில் ரசாயனம் கலப்படம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதனால் சாராய பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    இது போல் சோலைகாடு அடுத்த கூத்தாடி வயல் பகுதியில் மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்திய போது, பாலசுப்பிரமணியன் (49) என்பவர் அனுமதியின்றி மது விற்பனை செய்வது தெரியவந்தது.போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×