search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரபேல் விமான முறைகேடு முழுமையான விசாரணை நடத்த வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
    X

    ரபேல் விமான முறைகேடு முழுமையான விசாரணை நடத்த வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

    ரபேல் விமான முறைகேடு முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். #MKStalin #Rafaledeal

    சென்னை:

    தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    பிரதமர் மோடி வெளிப்படையான, ஊழலற்ற ஆட்சியை தருவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால், பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே அளித்துள்ள பேட்டி ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் உள்ள சந்தேகத்தை வெளிப்படுத்துகிறது.

     


    பிரதமர் நரேந்திர மோடி இது குறித்து இந்திய மக்களுக்கு விளக்கமளிக்க கடமைப்பட்டிருக்கிறார். இதன் உண்மை நிலையை அறிய முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #MKStalin #Rafaledeal

    Next Story
    ×