search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பென்னாகரம் அருகே தீக்குளித்த கட்டிட தொழிலாளி மரணம்
    X

    பென்னாகரம் அருகே தீக்குளித்த கட்டிட தொழிலாளி மரணம்

    மகள் மாயமானது குறித்து ஊரார் தவறாக பேசிவிடுவார்களோ என்று எண்ணி கட்டிட தொழிலாளி தீக்குளித்து இறந்த சம்பவம் அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பர்வதனஅள்ளி சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (வயது 38). கட்டிடதொழிலாளி. இவரது மனைவி விமலாராணி (31). இவர்களுக்கு 17 வயதில் ஒரு மகள் உள்ளனர். இவர் கடந்த 10-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிபோன அவர்கள் மகளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.

    கடந்த 11-ந்தேதி அவர் மீண்டும் வீட்டிற்கு வந்து விட்டார். தனது மகள் மாயமாகி மீண்டும் திரும்பி வந்ததால் ஊரார் ஏளனமாக பேசி விடுவார்களோ என்று கந்தசாமி மிகவும் மனவருத்தத்துடன் காணப்பட்டார்.

    நேற்று மகளுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்படுவதாக பள்ளியில் இருந்து அழைப்பு வந்தது. விமலாராணி தனது கணவரிடம் பள்ளிக்கு சென்று சான்றிதழை வாங்கி வருமாறு கூறினார். அதற்கு அவர் நான் வீட்டிலேயே இருக்கிறேன். நீ பள்ளிக்கு சென்று சான்றிதழை வாங்கி வா என்று கூறி விமலா ராணியை அனுப்பி வைத்தார்.

    உடனே விமலாராணி பள்ளிக்கு சென்று சான்றிதழை வாங்கி கொண்டு திரும்பி வந்தார். அப்போது அங்கு உடலில் மண்எண்ணையை ஊற்றி கொண்டு கையில் தீப்பெட்டியுடன் கந்தசாமி நின்று கொண்டிருந்தார். இதனை கண்ட விமலா ராணி வேண்டாம் என்று கதறினார். அதற்குள் அவர் உடலில் தீவைத்துக் கொண்டார். 

    இதில் அவரது உடல் முழுவதும் தீ பரவியதால் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து கந்தசாமியை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    சம்பவம் குறித்து பென்னாகரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனது மகள் மாயமானது குறித்து ஊரார் தவறாக பேசிவிடுவார்களோ என்று எண்ணி கட்டிட தொழிலாளி தீக்குளித்து இறந்த சம்பவம் அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×