search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேன்கனிகோட்டை  அருகே  2 பேர் மின்சார வேலியில் சிக்கி பலி
    X

    தேன்கனிகோட்டை அருகே 2 பேர் மின்சார வேலியில் சிக்கி பலி

    தேன்கனிகோட்டை அருகே வனவிலங்குகளை வேட்டையாட சென்ற 2 பேர் மின்சார வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    தேன்கனிகோட்டை:

    தேன்கனிகோட்டை அருகேயுள்ள நாட்ராம் பாளையம் புதூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் கெம்பன் மற்றும் சிவனப்பா. இவர்கள் இருவரும் உறவினர்கள் ஆவர். நேற்று இரவு வனவிலங்குகளை வேட்டையாட அதேபகுதியில் உள்ள பஞ்சள்துணை என்ற கிராமத்திற்கு இவர்கள் சென்று உள்ளனர். 

    அப்போது அங்கு சித்தராமையா என்பவரின் வேர்க்கடலை தோட்டத்தில் காட்டுப்பன்றிகளை வேட்டையாட வைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் இருவரும் சிக்கியுள்ளனர். இதனை தொடர்ந்து மின்சாரம் தாக்கிய அவர்கள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர்.

    இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற அஞ்செட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சார வேலியில் சிக்கி 2 பேர் சிக்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×