என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வத்தலக்குண்டுவில் சாக்கடை கழிவால் தொற்றுநோய் பரவும் அபாயம்
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு பகுதியில் பெரும்பாலான சாக்கடை கால்வாய்கள் முறையாக அமைக்கப்படாததால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் சாலையில் தேங்கி நிற்கிறது. குறிப்பாக பஸ்நிலையம் முன்பு ஏற்பட்டுள்ள பள்ளத்தில் கழிவுநீர் செல்வதால் துர்நாற்றம் வீசுகிறது.
இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதேபோல் நகரின் பல பகுதிகளிலும் கழிவுநீர் தெருவில் ஓடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
காமராஜபுரம் பகுதியில் குடிநீர் குழாய் அருகே சாக்கடை கழிவுகள் செல்லமுடியாமல் அடைத்துள்ளது. இதுகுறித்து பலமுறை பேரூராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இப்பகுதி பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. தற்போதே ஒருசிலருக்கு அரிப்பு போன்ற தோல்வியாதிகள் ஏற்பட்டுள்ளன. எனவே மாவட்ட நிர்வாகம் இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர். மேலும் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் பொதுமக்களே சாக்கடையை தூர்வாரி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்