search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காட்பாடி ரெயில் நிலையத்தில் பிரீபெய்டு ஆட்டோ ஓட தொடங்கியது
    X

    காட்பாடி ரெயில் நிலையத்தில் பிரீபெய்டு ஆட்டோ ஓட தொடங்கியது

    காட்பாடி ரெயில் நிலையத்தில் நிறுத்தபட்ட பிரீபெய்டு ஆட்டோக்கள் இன்று முதல் மீண்டும் ஓடத் தொடங்கியது.

    வேலூர்:

    காட்பாடி ரெயில் நிலையத்தில் ‘பிரீபெய்டு’ ஆட்டோ சேவை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. டீசல், பெட்ரோல் ஆட்டோ டிரைவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த சேவை 2 முறை நிறுத்தப்பட்டது.

    இதனிடையே காட்பாடி ரெயில் நிலைய வளாகத்தில் ‘பிரீபெய்டு’ ஆட்டோ சேவை தொடங்குவது குறித்து ஆட்டோ டிரைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் சித்தூர் பஸ்நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது.

    இதில், சுமார் 120 ஆட்டோ டிரைவர்கள் கலந்து கொண்டனர். மண்டலக்குழு முன்னாள் தலைவர் சுனில்குமார் மற்றும் பலர் பேசினர்.

    கூட்டத்தில், பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது, மதுபோதையில் ஆட்டோ ஓட்டக்கூடாது, சீருடை அணிந்து தான் ஆட்டோ ஓட்ட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முதல் காட்பாடி ரெயில் நிலைய வளாகத்தில் ‘பிரீபெய்டு’ ஆட்டோ சேவை தொடங்க ஒத்துழைப்பு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

    தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் நகலை காட்பாடி ரெயில் நிலைய வணிக மேலாளர், வட்டார போக்குவரத்து அலுவலர், காட்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோரிடம் ஆட்டோ டிரைவர்கள் வழங்கினர்.

    இதையடுத்து இன்று காலை முதல் பிரீபெய்டு ஆட்டோக்கள் இயக்கபட்டன. குறைந்த கட்டணத்தில் ஆட்டோக்கள் இயக்கபடுவதால் பயணிகள் வரவேற்பு அளித்துள்ளனர்.

    Next Story
    ×