search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாரூர் அருகே விவசாயிகள் திடீர் சாலை மறியல்
    X

    திருவாரூர் அருகே விவசாயிகள் திடீர் சாலை மறியல்

    திருவாரூர் அருகே சம்பா பயிரை காப்பாற்ற தண்ணீர் விட கோரி விவசாயிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே மாங்குடி, திருநெய்ப்பேர், குன்னியூர், வடகரை ,ஆத்தூர், கூடூர், கல்யாணமகாதேவி, புதுப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஆயிரக்கணக்கான சம்பா பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருகிறது. இதனால் விவசாயிகள் பாண்டவையாற்றில் தண்ணீர் விட்டு பயிர்களை காப்பாற்ற பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டனர். ஆனால் எந்த பயனும் விவசாயிகளுக்கு கிடைக்க வில்லை.

    இதனையடுத்து திருவாரூர் அருகே மாங்குடி பாண்டவையாறு பாலத்தின் அருகே அனைத்து கட்சியை சேர்ந்த விவசாயிகள் நேற்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது பாண்டவையாற்றில் முறை வைக்காமல் தண்ணீர் விட வேண்டும் என வலியுறுத்தியும், தண்ணீர் முறையாக வழங்காத தமிழக அரசை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.

    மறியல் போராட்டம் காரணமாக ஒரு மணி நேரத்திற்கு மேலாக திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் பொதுப்பணித்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக தண்ணீர் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர் அதன் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

    Next Story
    ×