search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூடுதல் வரதட்சணை கேட்டு பெண் சித்ரவதை- கணவர் உள்பட 7 பேர் மீது வழக்கு
    X

    கூடுதல் வரதட்சணை கேட்டு பெண் சித்ரவதை- கணவர் உள்பட 7 பேர் மீது வழக்கு

    கூடுதல் வரதட்சணை கேட்டு பெண்ணை சித்ரவதை செய்ததாக கணவர் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    பேரையூர்:

    திருமங்கலம் முகமதுஷா புரத்தைச் சேர்ந்தவர் இஸ்மாயில். இவரது மகள் பெமினா பேகம் (வயது 32). இவருக்கும், பரமக்குடி பார்த்திபன் நகர் செய்யது அலி (35) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடை பெற்றது.

    சவுதியில் பணியாற்றிய செய்யது அலி விடுமுறையில் ஊருக்கு வந்தார். அப்போது தொழில் செய்வதற்காக கூடுதல் நகை-பணம் வாங்கி வரும்படி மனைவியை சித்ரவதை செய்துள்ளார்.

    இதனால் தாய் வீடு வந்த பெமினா பேகம், திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

    அதில், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர், கூடுதல் வரட்சணையாக 50 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் கேட்டு சித்ரவதை செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.

    போலீசார் விசாரணை நடத்தி செய்யது அலி, அவரது பெற்றோர் ஜின்னா, ரோசர் செரிமா, உறவினர்கள் நஜிதா, சாகுல் அமீது, ‌ஷர்மிளா பினு, பக்ருதீன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். #tamilnews
    Next Story
    ×