search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரும்பாக்கத்தில் அதிமுக ஆலோசனை கூட்டம் - பாராளுமன்ற தேர்தல் குறித்து வியூகம்
    X

    பெரும்பாக்கத்தில் அதிமுக ஆலோசனை கூட்டம் - பாராளுமன்ற தேர்தல் குறித்து வியூகம்

    சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக் கழகம் சார்பில் பெரும்பாக்கத்தில் அதிமுக ஆலோசனை கூட்டம் நடந்தது. #ADMK

    சென்னை:

    சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக் கழகம் சார்பில் பெரும்பாக்கத்தில் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடந்தது. பகுதிச் செயலாளர் கே.பி.கந்தன் தலைமை தாங்கினார்.

    மாவட்டச் செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், ஜெயவர்தன் எம்.பி., நீலாங்கரை முனுசாமி, அம்மா பேரவை மாநில துணைச் செயலாளர் பெரும் பாக்கம் எ.ராஜசேகர், எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைச் செயலாளர் டி.சி.கோவிந்த சாமி, ஒன்றிய செயலாளர் என்.சி.கிருஷ்ணன், கிழக்கு பகுதி செயலாளர் லியோ என்.சுந்தரம் சிறப்புரையாற்றினார்கள்.

    வரஇருக்கிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வின் வெற்றி வியூகம் குறித்தும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணியில் கழகத்தினர் பங்கேற்பது குறித்தும் சிட்லபாக்கம் ராஜேந்திரன் விரிவாக பேசினார்.

    இதில் பொருளாளர் மகான், கொட்டிவாக்கம் ராஜாராம், ஜெயச்சந்திரன், மீரான், கோவிலம்பாக்கம் மணிமாறன், திருவேங்கடம், குப்பன், அம்பிகாமூர்த்தி, வாசுகி ராஜாராம், வெங்கடேசன், சுகாசினி ரங்கராஜன், ராஜாராம், ராஜரத்தினம், ராஜமாணிக்கம், பொன்னு சாமி, ஜானகிராமன், மணிகண்டன், டி.சி.கருணா, எம்.எஸ்.பாஸ்கரன், ஊராட்சி கழக செயலாளர் பாலு என்கிற ரங்கராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை பெரும்பாக்கம் ராஜசேகர் முன்னின்று செய்திருந்தார். #ADMK

    Next Story
    ×