search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொன்னேரி அருகே திருமணம் செய்வதாக கூறி பெண்ணிடம் நகை-பணம் மோசடி - வாலிபர் கைது
    X

    பொன்னேரி அருகே திருமணம் செய்வதாக கூறி பெண்ணிடம் நகை-பணம் மோசடி - வாலிபர் கைது

    பொன்னேரி அருகே திருமணம் செய்வதாக கூறி பெண்ணிடம் நகை-பணம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #arrest

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த காட்டாவூரை சேர்ந்தவர் மோகனபிரியா (23). ஏற்கனவே திருமணமான இவர் கணவரை பிரிந்து தாய் வீட்டில் இருக்கிறார். இந்த நிலையில் ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த சவுந்திரராஜன் (24). என்ற வாலிபருடன் மோகன பிரியாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.

    அவரை திருமணம் செய்வதாகவும், வீடு கட்ட பணம் வேண்டும் என்று கூறி மோகன பிரியாவிடம் சவுந்திரராஜன் 10 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் பணம் ஆகியவற்றை வாங்கியுள்ளார். ஆனால் திருமணம் செய்யாமல் ஏமாற்றி வந்தார்.

    இதுகுறித்து அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மோகன பிரியா புகார் செய்தார். இதையடுத்து நகை, பணம் மோசடி செய்த வாலிபர் சவுந்திரராஜனை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×