search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தெற்கு ரெயில்வேக்கு உட்பட்ட ரெயில்களில் டீ, காபி விலை ரூ.10 ஆக உயர்வு
    X

    தெற்கு ரெயில்வேக்கு உட்பட்ட ரெயில்களில் டீ, காபி விலை ரூ.10 ஆக உயர்வு

    தெற்கு ரெயில்வேயில் இன்று (வெள்ளிக் கிழமை) முதல், ரெயில் களில் டீ மற்றும் காபி விலை ரூ.10 ஆக உயர் கிறது. #SouthernRailway #TeaCoffee
    சென்னை:

    நாடு முழுவதும் ரெயில்களில் டீ, காபி விலையை அதிகரித்துக்கொள்ள ஐ.ஆர்.சி.டி.சி-க்கு ரெயில்வே நிர்வாகம் அனுமதி அளித்து இருக்கிறது. இதற்கான சுற்றறிக்கையை ரெயில்வே நிர்வாகம், அந்தந்த மண்டலங்களுக்கு அனுப்பியது.

    இதைத்தொடர்ந்து தெற்கு ரெயில்வேயில் உள்ள சென்னை சென்டிரல், சேலம், திருச்சி, மதுரை, பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய கோட்டங்கள் வழியாக செல்லும் ரெயில்களில் டீ, காபி விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இந்த விலை உயர்வு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.

    இதுவரை, 150 மி.லி. அளவுகொண்ட டீ மற்றும் காபி ரூ.7-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அந்த விலையில் இருந்து தற்போது ரூ.3 அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி, 170 மி.லி. அளவுகொண்ட பேப்பர் குவளைகளில் 150 மி.லி. அளவு கொண்ட டீ, காபி இனிமேல் ரூ.10-க்கு விற்பனை செய்யப்படும்.

    அதேநேரம் ரெயில் நிலையங்களில் ஏற்கனவே தயார் செய்துகொண்டு வந்து விற்கப்படும் டீ ரூ.5 என்ற விலையிலே தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என்று தெற்கு ரெயில்வே வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக தெற்கு ரெயில்வேக்கு உட்பட்ட சென்னை சென்டிரல், சேலம், திருச்சி, மதுரை, பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய கோட்டங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் கூறினார்கள்.

    இதைப்போல, ரெயில்களில் விற்பனை செய்யப்படும் பிற உணவு பண்டங்களின் விலையும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும், விரைவில் அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்றும் ஐ.ஆர்.சி.டி.சி. அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×