என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலூர் சத்துவாச்சாரியில் இளம்பெண்ணிடம் செயின் பறிப்பு
Byமாலை மலர்20 Sep 2018 4:36 PM GMT (Updated: 20 Sep 2018 4:36 PM GMT)
வேலூர் சத்துவாச்சாரியில் கணவருடன் பைக்கில் சென்ற இளம்பெண்ணிடம் 3 பவுன் செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
வேலூர்:
காட்பாடி காங்கேய நல்லூரை சேர்ந்தவர் சேகர் (வயது48). துணிவியாபாரி. இவரது மனைவி தனலட்சுமி (45). தம்பதி இருவரும் நேற்று சத்துவாச்சாரியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து விட்டு இரவு வீடுதிரும்பிக் கொண்டிருந்தனர்.
கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள மேம்பாலத்தின் மீது பைக்கில் வந்து கொண்டிருந்த போது பின்னால் வந்த பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் தனலட்சுமி அணிந்திருந்த 3 பவுன் செயினை பறித்து கொண்டு தப்பிச் சென்று விட்டனர்.
அதிர்ச்சியடைந்த தம்பதியினர் இது குறித்து சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் செயின் பறித்து சென்ற கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X