என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மதுரையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்தவர் கைது
மதுரை:
தேசிய பல்கலைக்கழக மானிய குழுவின் தென் கிழக்கு மண்டல தலைவர் சீனிவாசன், மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
உசிலம்பட்டி-தேனி ரோட்டைச் சேர்ந்தவர் சத்தியசீலன் (வயது30) என்பவர் மதுரை பொன்மேனி மாடக்குளம் மெயின் ரோட்டில் பல்கலைக் கழக மானிய குழு அலுவலகம் என்று போலியாக அமைத்துள்ளார்.
அதன் மூலம் வேலை வாங்கி தருவதாக பலரிடம் பண மோசடி செய்துள்ளார். அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்த தீபா என்பவர் இதுபற்றி தேசிய பல் கலைக்கழக மானிய குழுவின் தென்கிழக்கு மண்டல அலுவலகத்தில் புகார் செய்துள்ளார். எனவே சத்தியசீலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து விசாரணை நடத்த எஸ்.எஸ்.காலனி போலீசாருக்கு மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், போலியாக பல்கலைக்கழக மானிய குழு அலுவலகம் அமைத்து பண மோசடி செய்ததாக சத்தியசீலனை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்