search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகர்கோவிலில் பிரபல கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
    X

    நாகர்கோவிலில் பிரபல கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

    கஞ்சா வழக்கு உள்பட 18 க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய கஞ்சா வியாபாரியை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டிருந்தார். அதன் படி மாவட்டம் முழுவதும் தொடர் குற்றச்செயலில் ஈடுபடுபவர்களை போலீசார் கண்காணித்து வந்தனர்.

    மாவட்டத்தில் கடந்த 9 மாதத்தில் இதுவரை 51 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றும் ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதன் மூலம் குண்டர் சட்டத்தில் கைதானவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது.

    சுசீந்திரம் தேரூர் புதுக்கிராமம் பகுதியைச் சேர்ந்தவர் ஆன்றனி(43) இவர் மீது கஞ்சா வழக்கு உள்பட 18 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. தற்போது கோட்டார் போலீஸ் நிலையத்தில் கஞ்சா வழக்கில் அவரை கைது செய்து இருந்தனர்.

    எனவே இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், கலெக்டர் பிரசாந்த் வடநேரேவுக்கு பரிந்துரை செய்தார். அவர் ஆன்றனியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து ஆன்றனியை குண்டர் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வடசேரி கண்ணுவிளை பகுதியைச் சேர்ந்த ரூபன் (வயது30), நாகர்கோவில் தட்டான்விளை பகுதியைச் சேர்ந்த கவுதம்(31) ஆகியோரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
    Next Story
    ×