search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை அரசு பல் மருத்துவக்கல்லூரியில் வாய்முக புனரமைப்பு மையம் - அமைச்சர் தகவல்
    X

    சென்னை அரசு பல் மருத்துவக்கல்லூரியில் வாய்முக புனரமைப்பு மையம் - அமைச்சர் தகவல்

    சென்னை அரசு பல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிநவீன கருவிகளுடன் கூடிய வாய்முக புனரமைப்பு மையத்தை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் துவக்கிவைத்தார்.
    சென்னை:

    சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் முப்பரிமான மாதிரி வடிவ அச்சு, டி.எம்.ஜே ஆர்த்ரோஸ்கோப்பி போன்ற அதிநவீன கருவிகளுடன் கூடிய வாய்முக புனரமைப்பு மையம், திசைத் திருப்பல் கருவி, மாணவர் உடற் பயிற்சி மையம், ரத்ததான முகாம் மற்றும் கல்லூரிக்கான புதிய பேருந்து ஆகியவற்றை துவக்கி வைத்து பேசுகையில்,

    அம்மாவின் அரசில் சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிய கட்டிடங்கள், அதி நவீன உபகரணங்கள் போன்றவை வழங்கப்பட்டு ஒப்புயர் மையமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    தற்போது துவக்கப்பட்டுள்ள அதிநவீன உபகரணமான முப்பரிமான மாதிரி வடிவ அச்சு மூலம் 3பி அச்சிடுதல் தொழில்நுட்பத்தை கொண்டு பல்வேறு சிகிச்சைகள் சிறப்பாக வடிவமைக்க முடியும்.

    இதனைக் கொண்டு எலும்புகளில் உள்ள தேய்மானம் அறுவை சிகிச்சைக்கான மாதிரி வடிவம் போன்றவற்றை அறுவை சிகிச்சை முன்பே கணித்து மிக நுட்பமான அறுவை சிகிச்சை செய்து வாய்முக புனரமைப்பு செய்திட முடியும் என்றார்.
    Next Story
    ×