என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒரத்தநாடு அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகருக்கு கொலை மிரட்டல்- 7 பேர் மீது புகார்
Byமாலை மலர்20 Sep 2018 11:27 AM GMT (Updated: 20 Sep 2018 11:27 AM GMT)
விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகருக்கு கொலை மிரட்டல் விடுத்த தஞ்சை வியாபாரி உள்பட 7 பேர் மீது புகார் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஒரத்தநாடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரத்தநாடு:
தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள மேலஉளூர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கமுருகானந்தம் (வயது 38). இவர் தஞ்சை தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி பொருளாளராக உள்ளார்.
இவருக்கும் தஞ்சையில் கடை நடத்தி வரும் பிரபாகரன் என்பவருக்கும் பொருள் வாங்கியது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதைதொடர்ந்து பிரபாகரன் உள்பட 7 பேர் கும்பல் மேலஉளூர் சென்று தங்கமுருகானந்தத்தை தகாத வார்த்தையால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரது ஜாதி பெயரைச் சொல்லி திட்டியதாகவும் தெரிகிறது.
இதுபற்றி தங்க முருகானந்தம் ஒரத்தநாடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் டி.எஸ்.பி (பொறுப்பு) நாகராஜன் விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த சம்பவம் ஒரத்தநாடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X