என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் பற்றி அவதூறு பேச்சு - எச்.ராஜா மீது 4 பிரிவுகளில் வழக்கு
Byமாலை மலர்20 Sep 2018 7:48 AM GMT (Updated: 20 Sep 2018 7:48 AM GMT)
இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் பற்றி அவதூறாக பேசிய எச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #HRaja #BJP
நாகர்கோவில்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பொதுக்கூட்டத்தில் பேசிய பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா, இந்து அறநிலையத்துறை அதிகாரிகளை அவதூறாக பேசினார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மேலும் எச்.ராஜா மீது போலீஸ் நிலையங்களிலும் புகார் செய்யப்பட்டு வருகிறது.
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் கோட்டார், கன்னியாகுமரி, சுசீந்திரம் ஆகிய 3 போலீஸ் நிலையங்களில் எச்.ராஜா மீது புகார் செய்யப்பட்டது. கோட்டார் போலீஸ் நிலையத்தில் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் புகார் செய்தார்.
அந்த புகாரில் வேடசந்தூர் பொதுக்கூட்டத்தில் பேசிய எச்.ராஜா, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக் கொண்டு கோவில் நிலங்களை விற்பனை செய்வதாக அவதூறாக பேசி உள்ளார். மேலும் அதிகாரிகள் வீட்டுப் பெண்களை அவமதிக்கும் வகையில் பேசி உள்ளார். இது எங்களுக்கு மன உளைச்சலை கொடுத்துள்ளது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.
அவரது புகாரின் பேரில் எச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்திய தண்டனை சட்டம் 505 (3) பொது இடத்தில் அவதூறாக பேசுதல், 294 (பி) ஆபாசமாக பேசுதல், 353 (அரசு பணி செய்ய இடையூறு ஏற்படுத்துதல்), மற்றும் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் என 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையே நேற்று சுசீந்திரத்தில் உள்ள திருக்கோவில்களின் தலைமை அலுவலகம் முன்பு கோவில் ஊழியர்கள் எச்.ராஜாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஏற்கனவே எச்.ராஜா விநாயகர் சிலை ஊர்வலத்தில் ஐகோர்ட்டையும், போலீசாரையும் அவதூறாக பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #HRaja #BJP
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பொதுக்கூட்டத்தில் பேசிய பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா, இந்து அறநிலையத்துறை அதிகாரிகளை அவதூறாக பேசினார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மேலும் எச்.ராஜா மீது போலீஸ் நிலையங்களிலும் புகார் செய்யப்பட்டு வருகிறது.
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் கோட்டார், கன்னியாகுமரி, சுசீந்திரம் ஆகிய 3 போலீஸ் நிலையங்களில் எச்.ராஜா மீது புகார் செய்யப்பட்டது. கோட்டார் போலீஸ் நிலையத்தில் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் புகார் செய்தார்.
அந்த புகாரில் வேடசந்தூர் பொதுக்கூட்டத்தில் பேசிய எச்.ராஜா, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக் கொண்டு கோவில் நிலங்களை விற்பனை செய்வதாக அவதூறாக பேசி உள்ளார். மேலும் அதிகாரிகள் வீட்டுப் பெண்களை அவமதிக்கும் வகையில் பேசி உள்ளார். இது எங்களுக்கு மன உளைச்சலை கொடுத்துள்ளது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.
அவரது புகாரின் பேரில் எச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்திய தண்டனை சட்டம் 505 (3) பொது இடத்தில் அவதூறாக பேசுதல், 294 (பி) ஆபாசமாக பேசுதல், 353 (அரசு பணி செய்ய இடையூறு ஏற்படுத்துதல்), மற்றும் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் என 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையே நேற்று சுசீந்திரத்தில் உள்ள திருக்கோவில்களின் தலைமை அலுவலகம் முன்பு கோவில் ஊழியர்கள் எச்.ராஜாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஏற்கனவே எச்.ராஜா விநாயகர் சிலை ஊர்வலத்தில் ஐகோர்ட்டையும், போலீசாரையும் அவதூறாக பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #HRaja #BJP
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X