search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக அரசை கண்டித்து நாமக்கல்லில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
    X

    தமிழக அரசை கண்டித்து நாமக்கல்லில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

    குட்கா ஊழல் தொடர்பாக தமிழக அரசை கண்டித்து நேற்று நாமக்கல்லில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாமக்கல்:

    குட்கா ஊழல் தொடர்பாக தமிழக அரசை கண்டித்தும், அதில் தொடர்புடைய அனைவரும் பதவி விலக வலியுறுத்தியும் நேற்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாமக்கல் அண்ணாசிலை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் மத்திய மந்திரியும், மாவட்ட பொறுப்பாளருமான காந்திசெல்வன் தலைமை தாங்கி பேசினார்.

    அப்போது அவர் தமிழகத்தில் எந்தெந்த துறைகளில் ஊழல் குற்றச்சாட்டு எழுந்து உள்ளது என்பது குறித்தும், ஊழலில் தொடர்புடைய அனைவரும் பதவி விலக வலியுறுத்தியும் பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நகர பொறுப்பாளர் மணிமாறன் முன்னிலை வகித்தார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க.வினர் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ள அமைச்சர்கள், அதிகாரிகள் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்ட அவைத்தலைவர் உடையவர், மாநில மகளிர் அணி துணை அமைப்பாளர் ராணி, சட்டதிட்ட திருத்தக்குழு உறுப்பினர் நக்கீரன், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் பார். இளங்கோவன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.பி.ராமசாமி, பொன்னுசாமி, பழனியம்மாள், சரஸ்வதி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கே.ஆர்.என். ராஜேஸ்குமார், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் மோகன் மற்றும் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், நகர பொறுப்புக்குழு உறுப்பினர்கள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். 
    Next Story
    ×