என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
காதலிக்க மறுத்த 11-ம் வகுப்பு மாணவியை தாக்கிய வாலிபர் - தந்தை போலீசில் புகார்
கோவை:
கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள என். சந்திராபுரத்தை சேர்ந்தகூலித் தொழிலாளி நெகமம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
எனது மகள் அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். அவர் பள்ளிக்கு செல்லும் போது எங்களது பகுதியை சேர்ந்த வீரன் என்பவரது மகன் ஜோசப் (வயது 18) என்பவர் தினசரி பின்தொடர்ந்து வந்து காதலிக்க வலியுறுத்து தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து எனது மகள் என்னிடம் கூறினார். நான் எனது பகுதியில் உள்ள பெரியவர்கள் முன்னிலையில் ஜோசப்பை அழைத்து இனிமேல் எனது மகளை தொந்தரவு செய்யக்கூடாது என எச்சரித்து அனுப்பினோம். சம்பவத்தன்று எனது மகள் பள்ளிக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டு இருந்த போது அவரை பின் தொடர்ந்து வந்த ஜோசப் மீண்டும் காதலிக்குமாறு தொந்தரவு கொடுத்துள்ளார். அவர் மறுக்வே கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார்.
எனவே எனது மகளை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து ஜோசப் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இது குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 11-ம் மாணவியை தாக்கிய ஜோசப்பை தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்