search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமணமான 6 மாதத்தில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி
    X

    திருமணமான 6 மாதத்தில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

    அரியலூர் அருகே திருமணமான 6 மாதத்தில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலியானார்.
    அரியலூர்:

    அரியலூர் அருகே உள்ள வைப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சிவா (வயது 28). இவருக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர் அப்பகுதியில் உள்ள வீடுகளில் டி.வி. கேபிள் இணைப்பு கொடுக்கும் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று கல்லக்குடி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு கேபிள் இணைப்பு கொடுக்க சென்றுள்ளார்.

    அப்போது மின் கம்பத்தில் ஏறி கேபிள் வயரை சாலையின் குறுக்கே தூக்கி எறிந்தார். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியில் வயர் சிக்கி அறுந்து மின்சாரம் செல்லும் மின்கம்பியில் பட்டுள்ளது. இதில் கேபிளை பிடித்து கொண்டிருந்த சிவா மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் அவரது இடது கை துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    கேபிள் வயரை அறுத்த டிப்பர் லாரி நிற்காமல் சென்று விட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கீழப்பழுவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிவாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×