என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமணமான 6 மாதத்தில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி
Byமாலை மலர்19 Sep 2018 3:57 PM GMT (Updated: 19 Sep 2018 3:57 PM GMT)
அரியலூர் அருகே திருமணமான 6 மாதத்தில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலியானார்.
அரியலூர்:
அரியலூர் அருகே உள்ள வைப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சிவா (வயது 28). இவருக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர் அப்பகுதியில் உள்ள வீடுகளில் டி.வி. கேபிள் இணைப்பு கொடுக்கும் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று கல்லக்குடி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு கேபிள் இணைப்பு கொடுக்க சென்றுள்ளார்.
அப்போது மின் கம்பத்தில் ஏறி கேபிள் வயரை சாலையின் குறுக்கே தூக்கி எறிந்தார். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியில் வயர் சிக்கி அறுந்து மின்சாரம் செல்லும் மின்கம்பியில் பட்டுள்ளது. இதில் கேபிளை பிடித்து கொண்டிருந்த சிவா மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் அவரது இடது கை துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
கேபிள் வயரை அறுத்த டிப்பர் லாரி நிற்காமல் சென்று விட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கீழப்பழுவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிவாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் அருகே உள்ள வைப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சிவா (வயது 28). இவருக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர் அப்பகுதியில் உள்ள வீடுகளில் டி.வி. கேபிள் இணைப்பு கொடுக்கும் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று கல்லக்குடி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு கேபிள் இணைப்பு கொடுக்க சென்றுள்ளார்.
அப்போது மின் கம்பத்தில் ஏறி கேபிள் வயரை சாலையின் குறுக்கே தூக்கி எறிந்தார். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியில் வயர் சிக்கி அறுந்து மின்சாரம் செல்லும் மின்கம்பியில் பட்டுள்ளது. இதில் கேபிளை பிடித்து கொண்டிருந்த சிவா மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் அவரது இடது கை துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
கேபிள் வயரை அறுத்த டிப்பர் லாரி நிற்காமல் சென்று விட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கீழப்பழுவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிவாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X