search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொன்னமராவதி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி
    X

    பொன்னமராவதி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி

    பொன்னமராவதி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்கள் வேகத்தடையில் சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
    பொன்னமராவதி:

    புதுக்கோட்டைமாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கொன்னைப்பட்டியைச் சேர்ந்தவர் காசிலிங்கம். இவரது மகன் முத்துபாண்டி (வயது 20) இவரது நண்பர்கள் ஆனந்த் (21), கோபால்(20).

    இவர்கள் 3 பேரும் கடந்த 17-ந் தேதி ஒரே மோட்டார் சைக்கிளில் பொன்னமராவதியில் இருந்து கொன்னைப்பட்டிக்கு  சென்றனர்.  பொன்னமராவதி - புதுக் கோட்டை சாலையில் பொன்னமராவதி கொப்பனாபட்டி  அரசு ஆரம்ப சுகாதார  நிலையம் அருகே உள்ளே வேகத்தடையில் சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்தனர். 

    இந்த விபத்தில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் பொன்னமராவதி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக  தஞ்சாவூர் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துபாண்டி பரிதாபமாக இறந்தார். ஆனந்த், கோபால் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

    இது குறித்து பொன்னமராவதி போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் பிரபாகரன் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    Next Story
    ×