search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் சார்பில் கேரளாவுக்கு ரூ. 20 லட்சம் நிவாரண பொருட்கள்
    X

    நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் சார்பில் கேரளாவுக்கு ரூ. 20 லட்சம் நிவாரண பொருட்கள்

    கேரள மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற கடும் வெள்ளப்பெருக்கில் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் சார்பில் ரூ. 20 லட்சம் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டது. #keralarain

    நாசரேத்:

    கேரள மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற கடும் வெள்ளப்பெருக்கில் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் கடுமையாக பாதிக்கப்பட்ட பெரியார் தாலுகா செண்ட மங்கலம் கிராமத்தில் 700 குடும்பத்திலுள்ள 2 ஆயிரத்து 500 பேருக்கு ரூ. 20 லட்சம் மதிப்பிலான 5 கிலோ அரிசி பைகள், மசாலாப் பொருள்கள், சீனி, பிஸ்கட், மாணவ -மாணவிகளுக்கான பேக்குகள், டிசர்ட், நைட்டி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் சார்பில் அதன் ஊழியர்கள், அதனுடன் இணைந்து செயல்படும் புது வாழ்வுச் சங்க உறுப்பினர்கள் மூலமாக 3-ம் கட்டமாக வழங்கப்பட்டது.

    ஏற்பாடுகளை இயேசுவிடுவிக்கிறார் ஊழிய நிறுவன பொதுமேலாளர் செல்வகுமார் தலைமையில் புது வாழ்வுசங்கத்தினர் செய்திருந்தனர். #keralarain

    Next Story
    ×