search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

    திண்டுக்கல் ரெயில் நிலையம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    திண்டுக்கல்:

    7 சி.பி.சி. பரிந்துரைத்த ரூ.18 ஆயிரம் குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும், சம்பள நிர்ணய பார்முலாவை உயர்த்தி வழங்க வேண்டும், ரெயில்வே நிர்வாகத்தை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், வாரிசுகளுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் ரெயில் நிலையம் முன்பு எஸ்.ஆர்.எம்.யு. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மூர்த்தி தலைமையில் 50 பேரும், சுசிதரன் தலைமையில் 40 பேரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் ரெயில்வே நிர்வாகத்தை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினர்.திண்டுக்கல் ரெயில் நிலையம், பணியாளர்கள், ஆர்ப்பாட்டம்
    Next Story
    ×