என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கும்பகோணம் அருகே பள்ளி மாணவி மாயம்
Byமாலை மலர்19 Sep 2018 11:48 AM GMT (Updated: 19 Sep 2018 11:48 AM GMT)
கும்பகோணம் அருகே டி.வி.பார்ப்பதை பெற்றோர் கண்டித்ததால் பள்ளி மாணவி மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்பகோணம்:
கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் கவரத் தெருவை சேர்ந்தவர் யோகேஸ்வரி (வயது 13). அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 17-ந்தேதி யோகேஸ்வரி வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார். இதை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் அன்று இரவு முழுவதும் யோகேஸ்வரி மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இதையடுத்து நேற்று காலை பெற்றோரிடம் கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றவர் நெடுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் யோகேஸ்வரி கிடைக்கவில்லை.
இது குறித்து கும்பகோணம் தாலுக்கா போலீசில் யோகேஸ்வரி பெற்றோர் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பள்ளி மாணவியை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X