search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனியில் வாலிபரிடம் ரூ.7 லட்சம் மோசடி செய்த தம்பதி
    X

    தேனியில் வாலிபரிடம் ரூ.7 லட்சம் மோசடி செய்த தம்பதி

    தேனியில் வாலிபரிடம் ரூ.7 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.

    தேனி:

    தேனி அருகே கீழக்கூடலூர் சாமாண்டிபுரத்தை சேர்ந்தவர் ரகு(வயது31). இவர் தேனியில் அலுவலகம் வைத்துள்ளார். அப்போது கோவை கே.கே.புதூர் சாய்பாபா காலனியை சேர்ந்த வெற்றிவேல், அவரது மனைவி கலைவாணி ஆகியோர் அறிமுகமாகி உள்ளனர்.

    அவர்கள் தாங்கள் ஆஸ்பத்திரிக்கு உபகரணங்கள் சப்ளை செய்யும் ஏஜென்சி வைத்துள்ளதாகவும், அதற்கு பணம் கொடுத்தால் நல்ல லாபம் கிடைக்கும் என தெரிவித்துள்ளனர். இதனைநம்பி ரகு பல்வேறு தவணைகளில் ரூ.7,21,040 பணம் கொடுத்துள்ளார்.

    அதன்பின்பு ரூ.27,135 பணத்தை மட்டும் லாபத்தொகை எனக்கூறி ரகுவிடம் கொடுத்துள்ளனர். ஆனால் அசல் பணத்தை திருப்பித்தரவில்லை. பலமுறை கேட்டும் தம்பதியினர் பணத்தை கொடுக்காததால் இதுகுறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் அளித்தார்.

    எஸ்.பி உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து வெற்றிவேலை கைது செய்தனர்.

    Next Story
    ×