search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜபாளையத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
    X

    ராஜபாளையத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

    ராஜபாளையத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் சிங்க ராஜா கோட்டைத்தெருவைச் சேர்ந்தவர் ராமசுப்பிர மணியன் (வயது 49) விவசாயி. இவர், தனது வயலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அப்பபேரி கண்மாய் கரையில் மோட்டார் சைக்கிளை நிறுத்திச் சென்ற ராமசுப்பிரமணியன் திரும்ப வந்தபோது வாகனம் மாயமாகி இருந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர், அந்தப்பகுதியில் விசாரித்தும் பலன் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் அவர் சம்பவத்தன்று தென்காசி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது ஒரு வாலிபர், தனது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் செல்வதை பார்த்தார். உடனடியாக அக்கம், பக்கத்தினர் துணையுடன் அந்த வாலிபரை ராமசுப்பிரமணியன் விரட்டிப் பிடித்தார்.

    பின்னர் அவர் தெற்கு போலீசில் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவரது பெயர் தொந்தி கணேசன் (25) முகவூரைச் சேர்ந்தவர் என தெரியவந்தது. அவரிடம் இருந்து திருட்டு மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டது.

    Next Story
    ×