என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ராஜபாளையத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
ராஜபாளையம்:
ராஜபாளையம் சிங்க ராஜா கோட்டைத்தெருவைச் சேர்ந்தவர் ராமசுப்பிர மணியன் (வயது 49) விவசாயி. இவர், தனது வயலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அப்பபேரி கண்மாய் கரையில் மோட்டார் சைக்கிளை நிறுத்திச் சென்ற ராமசுப்பிரமணியன் திரும்ப வந்தபோது வாகனம் மாயமாகி இருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர், அந்தப்பகுதியில் விசாரித்தும் பலன் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் அவர் சம்பவத்தன்று தென்காசி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஒரு வாலிபர், தனது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் செல்வதை பார்த்தார். உடனடியாக அக்கம், பக்கத்தினர் துணையுடன் அந்த வாலிபரை ராமசுப்பிரமணியன் விரட்டிப் பிடித்தார்.
பின்னர் அவர் தெற்கு போலீசில் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவரது பெயர் தொந்தி கணேசன் (25) முகவூரைச் சேர்ந்தவர் என தெரியவந்தது. அவரிடம் இருந்து திருட்டு மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்