search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காட்டுயானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
    X

    காட்டுயானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

    காட்டுயானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்கக்கோரி சேரம்பாடியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    பந்தலூர்;

    பந்தலூர், கூடலூர் தாலுகாக்களில் காட்டுயானைகள் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்து குடியிருப்புகள் மற்றும் விவசாய பயிர்களை சேதப்படுத்துவதும், மனிதர்களை தாக்குவதும் தொடர்கதையாகி விட்டது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் எந்த நேரத்திலும் காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்துவிடுமோ? என்ற பீதியில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் காட்டுயானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்கக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சேரம்பாடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் பாஸ்கரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

    அதில், வனவிலங்குகள் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், காட்டுயானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க மின்வேலி அமைத்து தர வேண்டும், ஆழமான அகழிகள் வெட்டப்பட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் சங்க உறுப்பினர்கள், பல்வேறு கட்சியினர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். முடிவில் சுதர்சனன் நன்றி கூறினார். #tamilnews
    Next Story
    ×