search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லையில் பெட்ரோல் நிரப்பிய போது தீப்பிடித்த பைக் - படுகாயமடைந்த வாலிபர் உயிரிழப்பு
    X

    நெல்லையில் பெட்ரோல் நிரப்பிய போது தீப்பிடித்த பைக் - படுகாயமடைந்த வாலிபர் உயிரிழப்பு

    நெல்லையில் பெட்ரோல் நிரப்பும் போது பைக் தீப்பிடித்ததில் படுகாயமடைந்த ஆல்வின் என்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
    நெல்லை:

    நெல்லை பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த ஆல்வின் என்ற இளைஞர் கடந்த 13-ம் தேதி தன்னுடைய புது பைக்கில் பெட்ரோல் நிரப்ப சென்றிருந்தார். ரூ.1000 க்கு பெட்ரோல் போடும்படி சொல்லிவிட்டு வாகனத்திலியே அமர்ந்திருந்தார்.

    அப்போது ரூ. 900 க்கு டேங்க் நிரம்பி பெட்ரோல் வெளியே சொட்ட ஆரம்பித்தது. இதை கவனித்த பங்க் ஊழியர் அவசர அவசரமாக பம்பை வெளியே எடுத்தார். இந்நிலையில், பம்பில் இருந்த பெட்ரோல் துளிகள் ஆல்வி மற்றும் வண்டியின் மீது பட, ஏற்கனவே சூடாக இருந்த பைக் உடனே பற்றி எரிய ஆரம்பித்தது.

    இந்த தீ விபத்தில் இருசக்கரவாகனம் முழுவதும் தீ பிடித்து எரிந்தது. பைக் மீது அமர்ந்திருந்த இளைஞரின் உடலையும் தீ பற்றிக்  கொண்டது. உடனே பங்க் ஊழியர்கள் தீயணைப்பு கருவி மூலம் தீயை அணைத்தனர். பைக் ஓட்டிய இளைஞர் ஆல்வின்  தீ காயத்துடன் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    தீவிர சிகிச்சைக்கு பின்னர் பலனின்றி ஆல்வின் இன்று உயிரிழந்தார். 
    Next Story
    ×