search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சங்கரன்கோவிலில் 4½ கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை
    X

    சங்கரன்கோவிலில் 4½ கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை

    சங்கரன்கோவிலில் தொழிலாளி வீடு புகுந்து 4½ கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடித்து சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் புதுமனை 4-ம் தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 50). இவர் தென்காசியில் உள்ள தனியார் சுவீட்ஸ் கடையில் வேலை செய்து வருகிறார். இதனால் தென்காசி மேலகரத்தில் குடும்பத்துடன் தங்கி உள்ளார். வாரம் ஒரு முறை மட்டும் சங்கரன்கோவிலுக்கு வந்து செல்வது வழக்கம்.

    புதுமனை தெருவில் உள்ள வீட்டை மாரியப்பனின் தாயார் பராமரித்து வந்துள்ளார். அவர் மாலையில் வந்து வீட்டை சுத்தம் செய்து லைட்டை போட்டு விட்டு பின் மறுநாள் காலையில் வந்து செல்வாராம். இதை நன்கு நோட்டம் விட்ட மர்ம நபர் சம்பவத்தன்று இரவு வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளான்.

    பின்னர் பீரோவையும் உடைத்து உள்ளே இருந்த சுமார் ரூ.95 ஆயிரம் மதிப்புள்ள 4½கிலோ வெள்ளி பொருள்களை கொள்ளை அடித்து விட்டு சென்று விட்டான். வேறு எதுவும் விலை உயர்ந்த பொருள்கள் இல்லாததால் அவை தப்பின. காலையில் வீட்டிற்கு வந்த மாரியப்பனின் தாயார் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது பற்றி சங்கரன்கோவில் டவுண் காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சங்கரன்கோவில் பகுதியில் நடைபெற்று வரும் தொடர் கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் மிகவும் பீதியில் ஆழ்ந்துள்ளனர். காவல்துறையினர் நள்ளிரவு ரோந்து பணியை மீண்டும் ஆரம்பித்து கொள்ளை சம்பவங்களை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். #tamilnews
    Next Story
    ×