என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமங்கலம் அருகே கோஷ்டி மோதல் - ராணுவ வீரர்கள் கைது
Byமாலை மலர்18 Sep 2018 12:23 PM GMT (Updated: 18 Sep 2018 12:23 PM GMT)
திருமங்கலம் அருகே கோஷ்டி மோதலில் ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டனர்.
பேரையூர்:
திருமங்கலம் அருகே உள்ள மேலஉறப்பனூரைச் சேர்ந்தவர் தவராஜ். இவருக்கு சிவக்குமார், சிவராமன், சிவபாண்டி என 3 மகன்கள் உள்ளனர். இதில் சிவக்குமார், சிவராமன் ராணுவ வீரர்களாக பணியாற்றி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவராமனுக்கு திருமணம் முடிந்தது. சம்பவத்தன்று பெண் வீட்டார் சார்பில் சீர்வரிசை பொருட்கள் சிவராமன் வீட்டுக்கு கொண்டுவரப்பட்டன.
அப்போது பக்கத்து வீட்டைச் சேர்ந்த முருகேசன் என்பவர் பொது பாதை பிரச்சினையில் உள்ளது என கூறி முள்வைத்து அடைத்துவிட்டார். இதனால் தவராஜ் தரப்புக்கும், முருகேசன் தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் இது மோதலாக வெடித்தது.
இருதரப்பினரும் கம்பு மற்றும் கற்களால் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இதில் சந்தோசம், அக்னீஸ்வரி, சிவக்குமார், தவராஜ், செல்வி ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
மோதல் தொடர்பாக இருதரப்பினரும் கொடுத்த புகாரின்பேரில் தவராஜின் மகன்கள் சிவக்குமார், சிவராமன், சிவபாண்டி, உறவினர் காசிராஜன், மற்றொரு தரப்பை சேர்ந்த சந்தோசம், அக்னீஸ்வரி, முருகேசன் உள்பட 20 பேர் மீது திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதில் ராணுவ வீரர்களான சிவராமன், சிவக் குமார், காசிராஜன், மூர்த்தி மற்றும் முருகேசன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருமங்கலம் அருகே உள்ள மேலஉறப்பனூரைச் சேர்ந்தவர் தவராஜ். இவருக்கு சிவக்குமார், சிவராமன், சிவபாண்டி என 3 மகன்கள் உள்ளனர். இதில் சிவக்குமார், சிவராமன் ராணுவ வீரர்களாக பணியாற்றி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவராமனுக்கு திருமணம் முடிந்தது. சம்பவத்தன்று பெண் வீட்டார் சார்பில் சீர்வரிசை பொருட்கள் சிவராமன் வீட்டுக்கு கொண்டுவரப்பட்டன.
அப்போது பக்கத்து வீட்டைச் சேர்ந்த முருகேசன் என்பவர் பொது பாதை பிரச்சினையில் உள்ளது என கூறி முள்வைத்து அடைத்துவிட்டார். இதனால் தவராஜ் தரப்புக்கும், முருகேசன் தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் இது மோதலாக வெடித்தது.
இருதரப்பினரும் கம்பு மற்றும் கற்களால் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இதில் சந்தோசம், அக்னீஸ்வரி, சிவக்குமார், தவராஜ், செல்வி ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
மோதல் தொடர்பாக இருதரப்பினரும் கொடுத்த புகாரின்பேரில் தவராஜின் மகன்கள் சிவக்குமார், சிவராமன், சிவபாண்டி, உறவினர் காசிராஜன், மற்றொரு தரப்பை சேர்ந்த சந்தோசம், அக்னீஸ்வரி, முருகேசன் உள்பட 20 பேர் மீது திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதில் ராணுவ வீரர்களான சிவராமன், சிவக் குமார், காசிராஜன், மூர்த்தி மற்றும் முருகேசன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X